
தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வில்லா ஊரடங்கு தொடங்குவதை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று கடைவீதிகளில் மக்கள் திரண்டனர். அனைத்து நகரங்களிலும் கடைவீதிகள் திருவிழாக் கூட்டம்போல காணப்பட்டன. வியாபாரிகள் காய்கறி விலைகளை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்தனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முதல்ஒரு வாரத்துக்கு எவ்வித தளர்வுகளும்இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி, அனைத்து கடைகளும் நேற்று திறந்திருந்தன. இதனால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதியது. கரோனா அச்சமின்றி, சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் நடமாடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hIDP0S
0 Comments