
சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜகோபாலன் (59). இவர் வகுப்பில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அநாகரிகமாக பேசியதாகவும், வாட்ஸ்-அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளையும், படங்களையும் அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ உட்பட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ராஜகோபாலனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fm6hE2
0 Comments