
ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கரோனா உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ரெம்டெசிவிர், ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு மற்றும் கரோனா தொடர்பான பொதுநல வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tQYVMN
0 Comments