
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து, திருத்தணி அருகேகள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக மாநில குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. சாந்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஎஸ்பி ஜான்சுந்தர் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு திருத்தணி அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள அருள்விநாயகர் கோயில் அருகே,சந்தேகத்துக்கு இடமானவகையில் நின்றுகொண்டிருந்த முதியவரை போலீஸார் சோதனை செய்தனர். அவர் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வைத்திருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oywXEs
0 Comments