
கரோனா கட்டுப்பாட்டை மீறி புதிய ஸ்மார்ட் கார்டு வாங்க தாம்பரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த இடம் நோய் பரவல் இடமாக மாறியது.
கரோனா பரவலை தடுக்க நேற்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர மற்றவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் நேற்று காலை, ‘ஸ்மார்ட் கார்டு’ வாங்க, கார்டுதாரர்கள் குவிந்தனர். ஒரேநாளில், 230 பேர் வரை கார்டுவாங்க வந்தனர். அவர்கள், சமூகஇடைவெளியையும் பின்பற்றவில்லை. இதனால், அலுவலகமே நோய் பரப்பும் மையமாக மாறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QaHTvw
0 Comments