https://ift.tt/33xcCpv

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வுகளை பெற முடியும். இதற்காக 044-27237107, 044-27237207 என்ற தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தினந்தோறும் 40 முதல் 50 அழைப்புகள் வருகின்றன. ‘கரோனா பரிசோதனை செய்துள்ளோம் முடிவுகளை எவ்வாறு பெறுவது?', ‘கரோனா அறிகுறிகள் உள்ளன. முடிவுகள் தெரியும் வரை என்ன மருந்துகளை எடுத்துக்கொள்வது?' என்பது போன்ற அழைப்புகள்தான் அதிகம் வருகின்றன. இதற்கு ஒரு மருத்துவரே விளக்கம் அளித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33wxfSH

Post a Comment

0 Comments