
கல்விக்கடனைச் செலுத்தா விட்டால் வீட்டை ஏலம் விடப் போவதாக வங்கி நிர்வாகம் மிரட்டுவதாக கீழக்கரையைச் சேர்ந்தவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (60). இவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு: எனது மகன் பல் மருத்துவம் படிக்க கீழக்கரையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றோம். தற்போது கடன் தொகையை உடனடியாகச் செலுத்தாவிட்டால் வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கி நிர்வாகம் மிரட்டி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ejkyB5
0 Comments