
விழுப்புரம் வி.மருதூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (50). விவசாயியான இவர் கரோனா அறிகுறி இருந்ததாக கூறி நேற்று முன்தினம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் இருந்து ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டார். தனக்கும் கரோனா தொற்று வந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார். வெகு நேரமாகியும் அவர்வீடு திரும்பவில்லை. இந்த சூழலில் அவரது நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் சிவக்குமாரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் விழுப்புரம் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uMQG5N
0 Comments