
டெல்லியைச் சேர்ந்தவர் டாக்டர் டிம்பிள் அரோரா (34). பெண் பல் மருத்துவரான இவருக்கும், தொழிலதிபரான ரவீஷ் சாவ்லாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், டிம்பிள் அரோரா கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்றில் இருந்த 7 மாத சிசு இறந்து போனது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலமாக சிசுவை மருத்துவர் அகற்றினர். ஆனால், 26-ம் தேதிகரோனா வைரஸ் பாதிப்புக்கு மருத்துவர் டிம்பிள் அரோரா உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bnzwEa
0 Comments