https://ift.tt/3oTops7

கரோனா தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்குவிளக்கம் கேட்டு விருதுநகர் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்குப் பதில் அளித்து டீன் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘தான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புவதாக’ தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீனாக கடந்த 17-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சுகந்தி ராஜகுமாரி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும், சுகாதார செயலர் நடத்திய காணொலி ஆய்வுக் கூட்டத்திலும் டீன் சுகந்தி ராஜகுமாரி பங்கேற்கவில்லை. அலுவல் நிமித்தமாகவும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காத அரசு மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரிக்கு விளக்கம் கேட்டு ஆட்சியர் இரா.கண்ணன் நோட்டீஸ் அனுப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ujYMlt

Post a Comment

0 Comments