https://ift.tt/3oVRUcK

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவைத் தடுப்பதற்காக காவல் துறை சார்பில் ‘பாலம்’ எனும் வாட்ஸ்அப் குழு நேற்று முன்தினம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார், செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட பாலம் எனும் வாட்ஸ்அப் குழு நேற்று முன்தினம் உருவாக்கப்பட்டது. குழு தொடங்கப்பட்ட, சிறிது நேரத்திலேயே ‘ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையை மறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பால் ஆம்புலன்ஸ்கள் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது’ என ஒருவர் புகார் தெரிவித்து இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oWy2Gx

Post a Comment

0 Comments