
தீவிர கரோனா தொற்றில் இருந்துகுணமடைந்தவர்கள் ‘கருப்புபூஞ்சை’ நோயால் பாதிக்கப்படுகின்றனர். மூக்கு, கண்களில் வலி, கடுமையான தலைவலி போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத் தலைவர், மருத்துவ நிபுணர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தீவிர தொற்றில் இருந்துகுணமடைந்தோர் ‘கருப்பு பூஞ்சை’என்கிற பிளாக் ஃபங்கஸ் (Mucormycosis) நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ‘கருப்பு பூஞ்சை’ நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், புற்றுநோயாளிகள், அதிக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை மட்டும் தாக்கி வந்த ‘கருப்பு பூஞ்சை’நோய், தற்போது தீவிர கரோனாதொற்றில் இருந்து குணமடைந்தவர்களையும் தாக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uQudov
0 Comments