
சம்ஸ்கிருத மொழியில் நவ்ய - நியாய சாஸ்திரத்தில் சிறந்த புலமை பெற்றதற்காகவும் பண்டைய கல்வி முறைக்கும் நவீன அறிவியல் முறைக்கும் பெரிய பாலமாக அமைந்ததற்காகவும் குடியரசுத் தலைவர் விருது பெற்ற சம்ஸ்கிருத ஆச்சாரியர் மைசூர் எம்.ஏ.லட்சுமி தாத்தாசார் (85) முதுமை காரணமாக நேற்று மைசூரில் காலமானார்.
சித்ர துர்காவில் உள்ள அரசுகல்லூரியில் சம்ஸ்கிருத விரிவுரையாளராக தனது பணியை தொடங்கிமேல்கோட்டை சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எம்.ஏ.லட்சுமி தாத்தாசார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bps7UX
0 Comments