https://ift.tt/3vDlW7W

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைநோயால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் 13 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அரசு, தனியார்மருத்துவமனைகளில் கருப்புபூஞ்சை பாதிப்பை குணப்படுத்தபயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) ஊசி மருந்தை தேவையான அளவு கொள்முதல் செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ftcxtR

Post a Comment

0 Comments