
கரோனா அச்சத்தால் பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்வது குறைந்து வருவதால், ரயில்களின் சேவையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில்வே துறையை நம்பியிருந்த தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர் என ஆயிரக்கணக்கானோர் வேலையின்றித் தவிக்கின்றனர்.
இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களில் தினமும் 2.30 கோடி பேர் வரை பயணம் செய்தனர். குறிப்பாக, மும்பை, சென்னை உட்பட ஏழு முக்கிய நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் மட்டும் சுமார் 1.23 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3efDctB
0 Comments