
30 நாள் பரோலில் வீடு திரும்பியுள்ள பேரறிவாளன் ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறி வாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டு 30 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wLQC6L
0 Comments