
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தஎம்.பி., எம்எல்ஏக்கள் சார்பில் மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நேற்று வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாகசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 எம்பிக்கள், 22 எம்எல்ஏக்கள் சார்பில் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fuxRio
0 Comments