https://ift.tt/3y16Mei

கோவை மாவட்டத்தில் ஆளும் கட்சியான திமுக சார்பில் எம்எல்ஏக்கள் இல்லாததால், கட்சி நிர்வாகிக்கு, வாரியத் தலைவர் பதவியை வழங்கி, மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை முறையாக கண்காணிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதன் முடிவில், மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக வந்தும், இங்கு அமைச்சராக நியமிக்கக்கூட ஒருவரும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவையில், தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பலவித கட்டமைப்புகள் உள்ளன. இம்மாவட்டத்தின் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்லவும், வளர்ச்சித் திட்டப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஆளும் கட்சியான திமுக சார்பில் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது, மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினர், பொதுமக்கள், நடுநிலையாளர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரை வருத்தமடையச் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3usQWGW

Post a Comment

0 Comments