
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவற்காக கண்காணிப்புப் பணிகளில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 50 வயதைக் கடந்த மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புள்ள போலீஸாரும் கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக கடும் வெயிலில், சாலைகளில் நீண்டநேரம் நின்று பணியாற்றுகின்றனர். இதனால், சரியான நேரத்துக்கு உணவருந்த முடியாமலும், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை சாப்பிட முடியாமலும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ou5jsq
0 Comments