https://ift.tt/3yJFV6Q

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சி ராக்கியாபாளையம்-2 நியாயவிலைக் கடையில், விலையில்லா அரிசி நேற்று விநியோகம் செய்யப்பட்டது. இந்த அரிசி மிகவும் தரமற்றதாகவும், கருப்பு நிறத்திலும், அசுத்தமாகவும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஊத்துக்குளி ரயில்வே காலனி மக்கள் கூறும்போது, "பேரிடர் நேரத்தில் பொது விநியோகத்தை நம்பித்தான் பலகுடும்பங்கள் உள்ளன. நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இருக்கும் பட்சத்தில், தற்போது எந்தவித வருவாயும் இன்றி வசிக்கும் ஏழை மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கு ரேஷன் கடையில்விநியோகிக்கும் அரிசியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் உண்டு. ஆனால், இந்த அரிசியை வாங்கி உணவு சமைத்து சாப்பிட முடியவில்லை" என்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fqFhmQ

Post a Comment

0 Comments