https://ift.tt/35j0XeU

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தடைக் காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் வரையான மீன்பிடித் துறைமுகங்களைச் சார்ந்துள்ள விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால், விசைப்படகு மீனவர்கள் இன்று (ஜூன் 15) முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீனவர்கள் கடைபிடிப்பது தொடர்பாக, அந்தந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pTZLIf

Post a Comment

0 Comments