https://ift.tt/3voPPb1

திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து எல்லை தாண்ட முயன்ற மதுப்பிரியர்களை எஸ்பி தலைமையில் போலீஸார்மடக்கினர். போலீஸாருக்கு போக்குகாட்டி அமராவதி ஆற்றில்குதித்து நீந்தி எல்லை தாண்டிச் சென்ற மதுப்பிரியர்கள் பலர்,காலை 11 மணிக்குள் மதுபானங்கள் விற்று தீர்ந்ததால் ஏமாற்றமடைந்தனர்.

தமிழக அரசின் உத்தரவால் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்று. அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமுள்ளதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாவட்டத்தின் எல்லையான மடத்துக்குளத்தை ஒட்டி திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. எல்லை மதுக்கடைகளில் மது வாங்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு எஸ்பி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zuaTQs

Post a Comment

0 Comments