
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய நவீன சிகிச்சை மையத்தை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, நவீன முறையில் சிகிச்சை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wVpfHP
0 Comments