பாரா ஒலிம்பிக் ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் (38 வயது) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். இறுதிப் போட்டியில் பிரான்சின் லூகாஸ் மஸூர் (23 வயது) 15-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் யதிராஜை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது. சுஹாஸ் யதிராஜ், உத்தரப்பிரதேச மாநிலத்தின், கவுதம் புத்தா நகர் (நொய்டா) மாவட்ட கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஏஎஸ் அதிகாரியான யதிராஜ், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தனது பன்முகத் திறமையை நிரூபித்துள்ளார்.
from Dinakaran.com |06 Sep 2021 https://ift.tt/2WPlUh7
via IFTTT
0 Comments