* புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜயன்ட்ஸ் அணியுடன் நேற்று மோதிய அரியானா ஸ்டீலர்ஸ் 38-36 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றது. * ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் எப்சி கோவா - கேரளா பிளேஸ்டர்ஸ் அணிகளிடையே நேற்று நடந்த லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.* கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீடு திரும்பிய நிலையில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என்றாலும் டெல்டா பிளஸ் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.* இங்கிலாந்து கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்டுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.* வில்வித்தை வீரர், வீராங்கனைகளுக்கான (சீனியர் ரீகர்வ்) தேசிய பயிற்சி முகாம் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கொல்கத்தாவில் (பிப். 25 - மார்ச் 31) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.* கேப் டவுனில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் (ஜன. 11-15) விளையாட உள்ள இந்திய அணி கேப்டன் கோஹ்லி நிச்சயமாக செய்தியாளர்களை சந்திப்பார் என பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.
from Dinakaran.com |03 Jan 2022 https://ift.tt/32FCAdH
via IFTTT
0 Comments