https://ift.tt/H2ECp3b

மதுரை: பெட்ரோல் டீசல் விலையில் மத்திய அரசுக்கு மட்டுமே செல்லும் செஸ் வரியை குறைக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் இன்று (சனிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் படத்திறப்பு நிகழ்ச்சி மாநில குழு உறுப்பினர் ரா.விஜயராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு, நாட்டில் மொழியை பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்த பார்க்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழி தான். அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில் நிகழ்வது வேறு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z4MXkpb

Post a Comment

0 Comments