IND vs SA 2-வது டி20 | சதம் விளாசி மிரட்டிய மில்லர்; துணை நின்ற டிகாக்: இந்திய அணி 16 ரன்களில் வெற்றி

குவாஹாட்டி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி 16 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இறுதி வரை வெற்றிக்காக போராடியது. அந்த அணி 221 ரன்கள் குவித்திருந்தது. டேவிட் மில்லர் இந்த போட்டியில் சதம் விளாசி இருந்தார். டிகாக் 69 ரன்கள் எடுத்திருந்தார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. குவாஹாட்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) அன்று நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments