IND vs SA 2-வது டி20 | களத்திற்குள் புகுந்த பாம்பு; சில நிமிடங்கள் நிறுத்தப்பட்ட ஆட்டம்

குவாஹாட்டி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட் செய்த போது ஆடு களத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. வழக்கமாக பாம்பு தான் படம் எடுக்கும். ஆனால் மைதானத்தில் இருந்த கேமராக்கள் பாம்பை படம் பிடித்து இருந்தன.

இந்த போட்டியின் 8-வது ஓவர் வீசப்படுவதற்கு முன்னதாக பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாம்பை பிடிக்க மைதான ஊழியர்கள் தேவையான கருவிகளுடன் விரைந்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments