
சென்னை: "வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை. இந்தக் கொள்கையை அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி நினைத்துவிடக் கூடாது. கலை அமைப்புகளின் கொள்கையாக, ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச.15) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த மாபெரும் விழாவில் சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலா ஆச்சார்யா விருது, டி.டி.கே விருது, இசை அறிஞர் விருது, நிருத்ய கலாநிதி விருது பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பில், தமிழ்நாட்டின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இசையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அத்தகைய உயரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இசைத்துறைக்கு தொண்டாற்றி உங்களைப் போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5sP8zMm
0 Comments