
மதுரை: மதுரை மாநகரில் மகளிர் தின விழா கொண்டாட ஓட்டுமொத்த பெண் போலீஸாருக்கும் ஒருநாள் விடுமுறை அளித்து, மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் உத்தரவிட்டது, தங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என பெண் காவலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மகளிர் தினத்தையொட்டி, மதுரையில் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தியும், கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும் கொண்டாடினர்.
இந்நிலையில், மதுரை மாநகரத்தில் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பணிபுரியும் சுமார் 1300க்கும் மேற்பட்ட பெண் காவல்துறையினர் மகளிர் தினம் கொண்டாடும் விதமாக இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்க, மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். இதையொட்டி, இன்று காலை அந்தந்த காவல் நிலையங்கள் வாயிலாக பெண் காவலர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DybY2eE
0 Comments