
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பும் நிலையில், அவை கால்குலேட்டர் போன்றவைதான். யாரும் அவற்றை ‘ஹேக்’ செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏப்.6-ம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 76 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ‘ஸ்டிராங்’ அறையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு துணை ராணுவம், காவல்துறை மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு, அனைத்து பகுதிகளும் ரகசிய கேமராக்கள் மூலம்கண்காணிப்பு மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் கண்காணிப்பு என மிகுந்த பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vdqHUL
0 Comments