https://ift.tt/2QqcaX4

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து சந்தேகத்தை எழுப்பும் நிலையில், அவை கால்குலேட்டர் போன்றவைதான். யாரும் அவற்றை ‘ஹேக்’ செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏப்.6-ம் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 76 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ‘ஸ்டிராங்’ அறையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு துணை ராணுவம், காவல்துறை மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு, அனைத்து பகுதிகளும் ரகசிய கேமராக்கள் மூலம்கண்காணிப்பு மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் கண்காணிப்பு என மிகுந்த பாதுகாப்பில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vdqHUL

Post a Comment

0 Comments