
திருப்பத்தூர் நகராட்சியில் சேகரிக் கப்படும் குப்பைக்கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவ தாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலிருந்தும் தினசரி 10 டன் குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நகராட்சி சார்பில் 5 இடங்களில் திடக் கழிவுமேலாண்மை திட்டம் செயல்படுத் தப்பட்டு வந்தாலும், நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் திருப்பத்தூர் - தி.மலை சாலையில் உள்ள மயானப்பகுதியையொட்டி கொட்டப்பட்டு அங்கேயே தீ வைத்து எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e69Huh
0 Comments