
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் குறைந்த அளவாக 59.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ‘‘மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.
எழுத்தறிவு கொண்டவர்கள் நிறைந்த சென்னைமாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற மாவட்டங்களைவிட வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே உள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 55.27 சதவீதம், 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளும் சேர்த்து 59.50 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் சென்னை மாவட்டத்தில் 59.10 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mv1kuw
0 Comments