
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் என கரோனா விதிமீறல் தொடர்பான கண்காணிப்பை, முக்கிய சாலைகள் மட்டுமின்றி தெருக்களிலும் மேற்கொள்ள வேண்டும் என ரோந்து போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறையினருடன் இணைந்து முன்களப் பணியாளர்களாக சென்னை போலீஸாரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கரோனா கால விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3drZNT5
0 Comments