
வேதாரண்யம் அருகே மணல் கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மீது பெட்ரோல் குண்டுவீசி போலீஸ்காரரைக் கொல்ல முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினத்தைச் சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை தென்னம்புலம் கிராமம் கருப்பன்காடு பகுதியைச் சேர்ந்த வீரமணி(24) என்பவர் ஓட்டி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு கத்திரிப்புலத்தில் இருந்து, உரிய ஆவணம் இன்றி டிராக்டரில் மணல் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3edPNMv
0 Comments