
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், நீர் இருப்பு கணிசமாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3 டிஎம்சி நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் இந்த ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னைக்கு பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்கு பருவமழையும் இயல்பைவிட அதிகமாகப் பொழிந்ததால் சென்னை குடிநீர் ஏரிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறுகிறது. குடிநீர் தட்டுப்பாடும் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wDhRRT
0 Comments