https://ift.tt/3v4MRc7

முக்கொம்பில் புதிய மேலணை கட்டும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் நிறைவடைந்து ஜூலையில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இரவு முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தன. இதனால், விநாடிக்கு 2.25 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் மேலணை வழியாக வெளியேறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uSf9WZ

Post a Comment

0 Comments