
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, பகலில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநிலம்முழுவதும் இரவு நேர ஊரடங்குஇன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 முதல் அதிகாலை4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நேரத்தில் தனியார், பொது பேருந்து சேவை,வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும்தனியார் வாகன பயன்பாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இடையிலான பொது, தனியார் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v2strL
0 Comments