
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வந்தாலும்முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ்அளவாக குறைந்து வருகிறது. இதனால் நாகர்கோவில் நகரில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலமான தற்போது குமரி மாவட்டத்தில் விட்டு விட்டுபெய்து வரும் மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. மலையோரங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uADe50
0 Comments