https://ift.tt/2S07yrm

நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் மற்றும் வானியல் ஆய்வு செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதுதவிர, வர்த்தக ரீதியாகவும் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதல் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா 2-வது அலைபரவல் தீவிரத்தால் ராக்கெட் ஏவுதல் திட்டங்கள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ok8SRZ

Post a Comment

0 Comments