
கரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மை அறிக்கையை வெளியிட வேண்டும் என மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவுறுத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்தும் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவிலும், விருதுநகர் விவிவி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலும், மருத்துவத்துறை அரசு மருந்து குடோனில் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uLrkW5
0 Comments