
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பான வழக்கின் விசாரணை, உதகை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சாட்சியிடம் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி அருணாச்சலம் விசாரணை நடத்தினார்.
கரோனா பரவல் காலகட்டத்தில் புதிய முயற்சியாக காணொலிக்காட்சி மூலம் சாட்சியிடம் விசாரணைநடத்தப்பட்டது. உதகை மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் மாலினி பிரபாகரன் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பிஎஸ்என்எல்அலுவலகத்தில் ரூ.2 லட்சம் அளவில் முறைகேடு நடந்துள்ள தாக, விஜய் பிள்ளை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2001-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bkG7zm
0 Comments