https://ift.tt/3fayE77

முறைகேடுகள் புகார்கள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுரப்பா அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று விசாரணை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சுரப்பா 2018 முதல் 2021 ஏப்ரல் 12-ம் தேதி வரை பொறுப்பு வகித்தார். இவரது பணிக் காலத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் உள்ளிட்டவற்றில் ரூ.280 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பல்கலை. உயரதிகாரிகள், புகார் அளித்தவர்கள், சாட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o4gdVK

Post a Comment

0 Comments