
அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவித்த அரசு, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டது. அதன்படி, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். அதில், சில ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o4g1pu
0 Comments