
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற இடம் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாவதை தவிர்க்க குறைந்தபட்ச படுக்கைகள் ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சிகிச்சை பெற அரசால்அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளின் விவரம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுபொது மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை களை நேரடியாக அணுகி, சிகிச்சைபெற்றுக்கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.cmchistn.comஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட் டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oAyD0y
0 Comments