https://ift.tt/3w6CViE

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் 8 ஆண்டு களுக்குப் பிறகு 2-வது முறையாக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வாய்ப்புள்ளதால் டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை பருவம் என்பது விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வருமானம் தரும் நெல் சாகுபடி பருவமாகும். இதற்கென ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eRGxiw

Post a Comment

0 Comments